Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆலங்குளம் அருகே ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் வாலிபர் தற்கொலை

டிசம்பர் 01, 2021 05:37

தென்காசி: ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் மேல தெருவை சேர்ந்தவர் காளியப்பன். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் முதல் மகன் கேரளாவில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 2-வது மகன் அடைக்கலராஜ் என்ற அருள் (வயது 25). இவர் பேட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு ராணுவத்தில் சேர பயிற்சி வகுப்பு சென்று வந்தார்.

இந்நிலையில் இன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கிடந்தார். தகவலறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அருள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொண்ட அருள் உடல்தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் பார்வை திறன் குறைபாடு இருப்பதாக இவரால் ராணுவத்தில் சேர முடியாமல் போய்விட்டது.

இதனால் கடந்த சில நாட்களாகவே அருள் மனமுடைந்து காணப்பட்டார். அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்