Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிவகாசி அருகே அனுமதியின்றி பெட்ரோல் விற்றவர் கைது

டிசம்பர் 02, 2021 10:47

சிவகாசி: சிவகாசி அருகே உள்ள மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் காக்கிவாடன்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரபு (வயது 41) என்பவர் தனது பெட்டிக்கடையில் பெட்ரோலை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 லிட்டர் பெட்ரோலை போலீசார் பறிமுதல் செய்து பிரபுவை கைது செய்தனர்.

தலைப்புச்செய்திகள்