![](admin/uploads/.6104ebd376ef12.65193993.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: ''இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு இந்தியா. முகலாய மன்னர் பாபர் வருவதற்கு முன், இந்தியாவில் அனைவரும் இந்துக்களாக தான் இருந்தனர்,'' என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.
அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நேற்று அவர் கூறியதாவது: இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு இந்தியா. உலகில் எந்த நாட்டில் இந்துக்கள் வசித்தாலும், அவர்கள் இந்திய வம்சாவளியினராக தான் இருப்பர்.
முகலாய மன்னர் பாபர் 1526ல் இந்தியாவுக்கு வந்தார். அதற்கு முன் வரை இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே இருந்தனர். வெளிநாடுகளில் வசிக்கும் இந்துக்களுக்கு கஷ்டம் ஏற்பட்டால், அவர்கள் எப்போது வேண்டு மானாலும் இந்தியாவுக்கு வரலாம்; அது, அவர்களது உரிமை.
கோவில் கட்டுவது, கோவிலை சீரமைப்பது ஆகிய பணிகள் மதவாதமாக கூறப்படுவது கண்டிக்கத்தக்கது. கோவில்கள் கட்டுவதும், சீரமைப்பதும் இந்துக்களின் உரிமை. ஒரு இந்துவால் மட்டுமே உண்மையான மதச்சார்பின்மைவாதியாக இருக்க முடியும். இந்துத்வா என்பது ஒரு வாழ்க்கை முறை. இதை தடுக்கவும் முடியாது; அழிக்கவும் முடியாது.
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்துத்வா இந்தியாவில் உள்ளது. இங்குள்ள கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களின் முன்னோர்கள் இந்துவாகத் தான் இருந்தனர். இந்தியா இருக்கும் வரை இந்துத்வாவும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.