![](admin/uploads/.5ef0ac1f6f72d5.68475732.gif)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பது, நிவாரணம் அளிப்பது, இதுபோன்ற வெள்ளப் பாதிப்புகள் இனியும் தொடராமல் இருப்பது என அனைத்து செயல்பாடுகளிலும் திமுக அரசு தோல்வியடைந்துள்ளது.
வெள்ளத்திலிருந்து மக்களைப் பாதுகாக் காமல் மக்களை திசை திருப்பும் வகையில் இந்து மதத்தில் அரசு தலையிட்டு வருகிறது. நாடு முழுவதும் சித்திரை 1-ம் தேதியை வெவ்வேறு விழாவாக கொண்டாடுகின்றனர். எனவே, தமிழ் வருடப் பிறப்பை தை 1-ம் தேதிக்கு மாற்றுவது கண்டிக்கக்கூடியது என்றார்.