Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை

டிசம்பர் 04, 2021 12:09

சென்னை: தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமைச் செயலகத்தில் குண்டு வைத்திருப்பதாக எஸ்.பி.சி.ஐ.டி. பாதுகாப்பு அலுவலகத்திற்கு வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து இன்று அதிகாலை தலைமைச் செயலக வளாகத்தில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

வெடிகுண்டு எதுவும் இல்லாததால் பின்னர் திரும்பி சென்றனர். கடிதம் அனுப்பிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்