Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவையில் மதுபான பெட்டிக்குள் பதுங்கி இருந்த பாம்பு

டிசம்பர் 07, 2021 04:06

கோவை: கோவையில் பிரபலமான தனியார் மால் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வெளிநாட்டு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படும் எலைட் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று கடை விற்பனையாளர்கள் ஒவ்வொரு பெட்டியாக திறந்து மது பாட்டில்களை எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மது பெட்டிக்குள் 2 அடி நீளம் உள்ள சிறிய பாம்பு மறைந்து இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அங்கிருந்த ஒருவர் கடைக்கு வந்து லாவகமாக அந்த பாம்பை பிடித்தார். இதுகுறித்து விசாரித்தபோது பீளமேடு டாஸ்மாக் குடோனில் இருந்து மதுபாட்டில் பெட்டிகள் வந்ததாகவும், அங்கு குடோனை ஒட்டியுள்ள முட்புதர்களில் இருந்து பாம்பு வந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

டாஸ்மாக் கடைக்கு வந்த மது பெட்டியில் பாம்பு இருந்த சம்பவம் ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த மாலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்புச்செய்திகள்