![](admin/uploads/.615ab4e31bc415.43404315.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப்படை வீரர்கள் - பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் அடிக்கடி அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்கள் பதுங்கியிருக்கும் இடங்களை கண்டறிந்து உள்ளூர் போலீசார் உதவியுடன் பாதுகாப்புப்படையினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இன்று காலை சோபியான் மாவட்டம் செக் சோழன் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக வீரர்கள் அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினர்.
அதற்கு வீரர்களும் பதிலடி கொடுக்க தொடங்கினர். தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.