Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஐஎஸ்எல் கால்பந்து - சென்னை, ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதிய ஆட்டம் டிரா

டிசம்பர் 12, 2021 10:42

கோவா: 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் சென்னையின் எப்.சி. அணியும், ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதின. ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் மோகன்  பகான் அணியின் யின்லிஸ்டன் கோலாகோ  ஒரு கோல் அடித்தார். இதனால் மோகன் பகான் அணி 1-0 என முன்னிலை பெற்றது. 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சென்னை அணியின் விடிமிர் கோமன் 45-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் முதல் பாதியில் 1-1 என சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எந்த அணியும் ஒரு கோல் அடிக்க முடியவில்லை.
  
இறுதியில் சென்னை, ஏடிகே மோகன்  பகான் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில்  முடிந்தது.

தலைப்புச்செய்திகள்