Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்ரீநகரில் பயங்கரவாதத் தாக்குதலில் 2 வீரர்கள் பலி- பிரதமர் மோடி இரங்கல்

டிசம்பர் 14, 2021 10:57

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள செவான் என்ற இடத்தில் உள்ள போலீஸ் முகாம் அருகே நேற்று மாலை போலீஸ் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில், 2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீநகரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்த விவரங்களை பிரதமர் மோடி கேட்டகறிந்தார். மேலும், இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான ஒமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோரும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்