Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த அஜய்குமார் உள்ளிட்ட 5 பேர் சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் மத்திய அரசின் பொதுத்துறையின் கீழ் இயங்கும் தடுப்பூசி உற்பத்தி ஆலைகளை புதுப்பித்து கொரோனா தடுப்பூசி உள்ளிட்டவற்றை பெருமளவில் தயாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
விசாரணையின்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரம் மத்திய அரசின் கொள்கை சார்ந்தது என வாதிட்டார். இதனையடுத்து இந்த பொதுநல மனு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.