![](admin/uploads/.5dc4377f3d20d5.55928340.gif)
Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க அரசு கட், கமிஷன், கரப்ஷன் ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. ஒரு திட்டம் சார்ந்து நடைபெறும் வேலைகளில் 20 சதவீதம் கமிஷன் கேட்கிறார்கள். முடிக்கப்பட்ட பணிகளுக்கு தொகை ஒதுக்கீடு செய்ய 4 சதவீதம் கமிஷனை கேட்கிறார்கள். தி.மு.க ஆட்சியில் இந்த ஊழல்கள் மேல்மட்டத்தில் இருந்து தொடங்கி நடந்து வருகிறது.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, வீடு தேடி மருத்துவம் போன்ற திட்டங்களை, வேறு பெயரில் தி.மு.க.வினர் மாநில அரசின் திட்டங்களை போல செயல்படுத்துகின்றனர். எந்த ஒரு திட்டத்தையும் அறிவார்ந்து யோசித்து, புதிதாக மக்களுக்கு செயல்படுத்தும் திறன் தி.மு.க அரசிடம் இருப்பதாக தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.