Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மொபட்டில் எடுத்து சென்றபோது நாட்டு வெடி வெடித்து தொழிலாளி உடல் சிதறி பலி

டிசம்பர் 16, 2021 10:06

கரூர்: திருச்சி மாவட்டம் மூக்க ரெட்டியபட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 44), சென்டிரிங் தொழிலாளி. இவருடைய மனைவி ஸ்ரீமதி (40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று மாலை முருகேசன் தனது மொபட்டில் கரூர் மாவட்டம் குளக்காரன்பட்டி அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரது மொபட்டில் வைத்திருந்த நாட்டு வெடிகள் திடீரென வெடித்து சிதறின.

இதில், மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட முருகேசன் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். போலீஸ் விசாரணையில் மொபட்டில் வைத்திருந்த நாட்டு வெடி வெப்பஅழுத்தம் காரணமாக வெடித்து சிதறியது தெரியவந்தது. எதற்காக வெடிகளை மொபட்டில் எடுத்து சென்றார்? எங்கு கொண்டு சென்றார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்