Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒமைக்ரான் பரவல்; விமான பயணிகள் தமிழகத்திற்குள் வர இ பதிவு கட்டாயம்

டிசம்பர் 17, 2021 10:51

சென்னை: வெளி மாநிலங்களில் இருந்து விமானத்தின் மூலம் தமிழகத்திற்குள் பயணிகள் வர இப்பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள் நாட்டுக்குள்ளேயே பயணிகள் கட்டுப்பாடுகள் அதிகரிக்க துவங்கியுள்ளது.

நாடு முழுவதும் ஒமைக்ரான் என்ற புதிய கோவிட் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இது வரை ஒமைக்கரான் பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி பிற மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் கோவிட் தடுப்பூசி போடப்பட்டிருப்பதுடன் இ பதிவு செய்து தான் வர வேண்டும். குறிப்பாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் நபர்கள் 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும். மேலும் இம்மாநில மக்கள் தமிழகம் வரும் போது 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கோவிட் நெகடிவ் சான்று அவசியம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்