Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றிபெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்

டிசம்பர் 19, 2021 10:16

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்.பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார். 

மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், விரைந்து பூத் கமிட்டி அமைக்க வேண்டும். ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 10 பேர் இடம்பெற வேண்டும். அதில் கட்டாயம் 2 மகளிர், 4 இளைஞர்கள் இருக்கவேண்டும். ஒதுக்கீடு விஷயத்தில் கூட்டணி கட்சிகளுடன் மாவட்ட அளவில் மாவட்ட செயலாளர்களே பேசி உடன்பாடு எட்ட வேண்டும் என  தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்