Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்த சதி: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

டிசம்பர் 20, 2021 11:55

புதுடெல்லி: 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு நான்கு கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது நியாயமில்லை என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் கடந்த கூட்டத்தில் ஒழுங்கீனமான நடந்து கொண்டதாக 12 மாநிலங்களவை எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது. ஆனால், கூட்டம் முடியும் வரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

கடந்த 29-ந்தேதி பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது, 12 எம்.பி.க்களும் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாத வகையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆறு காங்கிரஸ் எம்.பி.க்கள், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிவ சேனா கட்கியை சேர்ந்த தலா இரண்டு எம்.பி.க்கள்., இரண்டு இடது சாரி கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, 12 எம்.பி.க்கள் மீதான நடவடிக்கையை துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவரான வெங்கையா நாயுடு திரும்பப்பெற வேண்டும் என  வலியுறுத்தி வருகின்றன. போராட்டங்களும் நடத்தி வருகின்றன. ஆனால், சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்பப் பெறப்படவில்லை.

இதனால் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 10 மணி நேரம்தான் அவைதான் நடந்துள்ளது. இதனால் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நான்கு கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு 4 கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்திருப்பது எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்தும் சதி. சஸ்பெண்ட் விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக உள்ளன. நான்கு கட்சிகள் என்பது நியாயமற்றது மற்றும் துரதிருஷ்டவசமானது என காங்கிரஸ் எம்.பி. மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்