Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புது டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-
வாஜ்பாயின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்வோம். தேசத்திற்காக அவர் ஆற்றியுள்ள செழுமையான சேவைகளால் நாம் உத்வேகம் பெற்றுள்ளோம். இந்தியாவை வலுவாக்கவும், வளர்ச்சியடைய வைக்கவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது வளர்ச்சி முன்னெடுப்புகள் லட்சக்கணக்கான இந்தியர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.