Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூரில் பெண் காவலர் திடீர் தற்கொலை

மே 03, 2019 11:13

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்  வைக்கப்பட்டுள்ள அறையில் பெண் காவலர் பர்வீன் பாவி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். நல்லூரில் வசித்துவரும் இவர் திடீரென தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பர்வீன் பாவியை  மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலே அவர் உயிரிழந்தார். காவல்துறையினர் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்துவரும் நிலையில், பர்வீன் பாவியின் தற்கொலை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. திருப்பூர் ஊரக போலீசார், இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்