Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திரள வேண்டும்: வைகோ

ஜனவரி 02, 2022 11:33

சென்னை: பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான சக்தியாக எதிர்க்கட்சிகள் திரள வேண்டும். அப்போதுதான், பா.ஜ.க.வை நாம் எதிர்த்து முறியடிக்க முடியும்.

புத்தாண்டு தினத்தையொட்டி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னையில்  நிருபர்களிடம் கூறியதாவது:-

ம.தி.மு.க. தொலைநோக்கு பார்வையுடன் எடுத்த அரசியல் நிலைப்பாட்டை, தமிழக மக்கள் சட்டமன்ற தேர்தலில் அங்கீகரித்து உள்ளனர். தமிழக மக்களின் பேராதரவுடன் மலர்ந்த தி.மு.க. ஆட்சி 7 மாத காலத்தில் பலத்த நம்பிக்கையை பெற்றுள்ளது. இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்-அமைச்சர் என்று பாராட்டப்படுகிறார்.

பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான சக்தியாக எதிர்க்கட்சிகள் திரள வேண்டும். அப்போதுதான், பா.ஜ.க.வை நாம் எதிர்த்து முறியடிக்க முடியும். இதில், நான் திருமாவளவனின் கருத்தை ஆமோதிக்கிறேன்.

தமிழக போலீசார் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானவர்கள் என்ற பெயரும் புகழும் உண்டு. ஆனால் 7 படை, 9 படை அமைத்தும் இன்னும் கூட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது காவல்துறைக்கு பெருமை அளிப்பதல்ல.

வாழ்நாள் முழுவதும் தமிழ்நாட்டின் நன்மைக்காகவும், ஈழத்தமிழர்களுக்காகவும், உலகத்தமிழர்களுக்காகவும் போராடுகிற வாழ்க்கை நடத்தினார் வைகோ என்ற பெயரை நிலைநாட்டுவேன். அதுவே எனக்கு போதும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்