![](admin/uploads/.60c846b5d96175.82845665.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பெங்களூரு: கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா-ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது வருகிற 7-ந் தேதி நிறைவடைகிறது. இரவுநேர ஊரடங்கை நீட்டிப்பது குறித்து 2 நாட்களில் முடிவு செய்யப்படும். அண்டை மாநிலங்களான மராட்டியம், தமிழகம், கேரளாவில் கொரோனா பரவல் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் அந்த மாநிலங்களின் எல்லை பகுதியில் தீவிரமாக கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
கொரோனா பரவலை தடுக்க அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் மதித்து நடந்து கொள்ள வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் முழுஊரடங்கை அமல்படுத்த மாட்டோம். ஒருவேளை பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால், முழுஊரடங்கு அமல்படுத்தப்படும். இதனை தவிர்க்க முடியாது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.