Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று

ஜனவரி 04, 2022 12:45

புதுடெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கோவிட் உறுதிபடுத்தப்பட்டதால், அவர் தனிமைப்படுத்தி கொண்டார். அதேபோல், காங்., பொதுச்செயலர் பிரியங்கா, குடும்பத்தில் ஒருவருக்கும், அலுவலருக்கும் கோவிட் உறுதியானதால் அவர் தனிமைபடுத்தி கொண்டார்.

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனக்கு கோவிட் தொற்று உறுதியாகி இருப்பதால் நான் தனிமைப்படுத்தி கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் சோதனை செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஒமைக்ரான் தாக்கம் தற்போது டில்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமாக பரவி வருகிறது. முக்கிய அரசியல் தலைவர்கள் பலருக்கு தற்போது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். அவரது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கும் கொரோனா தாக்கம் இருந்ததன் காரணமாக தற்போது அவர் தனிமையில் உள்ளார். அவருக்கு நடந்த பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்தது. டாக்டர்கள் அறிவுறைப்படி வீட்டு தனிமையில் உள்ளதாகவும், சில நாட்கள் கழித்து மீண்டும் பரிசோதனை செய்ய டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளதாகவும் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்