Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பரவல் அதிகரிப்பு; தமிழகத்தில் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்கள் மூடல்?

ஜனவரி 04, 2022 01:09

சென்னை: ஒமைக்ரான் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் வருகிற 10-ந்தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, ஏற்கனவே நடைமுறையில் இருந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் வழிபாட்டு தலங்களை மூட வேண்டும். கடைகள் திறப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் போன்ற பரிந்துரைகளை சுகாதாரத்துறை சார்பில் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. இதனால் நாளை அல்லது நாளை மறுதினத்தில் இருந்து கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்