![](admin/uploads/.63fc4e42074874.09565067.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: மருத்துவ மற்றும் முன் களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இணை நோய்கள் உள்ளோருக்கு வருகிற 10ம் தேதி முதல், 'முன்னெச்சரிக்கை டோஸ்' எனப்படும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடப்பட உள்ளது.
இது குறித்து நிடி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் நேற்று கூறியதாவது:முதல் இரண்டு டோஸ் கோவாக்சின் போட்டுக் கொண்டவர்களுக்கு மூன்றாவது டோஸாக கோவாக்சின் மட்டுமே போடப்படும். கோவிஷீல்டு போட்டுக் கொண்டவர்களுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்
இதற்கிடையே, நேற்று ஒரே நாளில் 89 லட்சத்திற்கும் அதிகமான 'டோஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்டது.இதனால், ஒட்டுமொத்த டோஸ் எண்ணிக்கை 148.61 கோடியை கடந்துள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.