Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொங்கல் பண்டிகை; ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.317 கோடிக்கு மது விற்பனை

ஜனவரி 15, 2022 03:36

சென்னை: தமிழகத்தில் பொங்கல் தினத்தன்று ஒரே நாளில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.317.08 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் கடந்த மூன்று நாட்களில் ரூ.675.19 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. இதில், அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.144.74 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், கடந்த ஜனவரி 12-ம் தேதியன்று ரூ.155.06 கோடிக்கும், ஜனவரி 13-ம் தேதி ரூ.203.05 கோடிக்கும் மதுபானங்களை விற்பனையாகியிருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் ரூ.317.08 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மதுரை மண்டலத்தில் 68.76 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 59.65 கோடி ரூபாய்க்கும், சென்னை மண்டலத்தில் 59.28 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 65.52 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 63.87 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் நேற்று ஒரே நாளில் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்