Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக அரசு குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக எஸ்.ஐ. சஸ்பெண்ட்

ஜனவரி 20, 2022 10:35

சென்னை: சமூக வலைதளங்களில் அவதுாறு கருத்துக்களை பரப்பியதாக சென்னை பூக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேகர் பணியிட நீக்கம் செய்யப்பட்டார்.

சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் சேகர். இவர் சமீபத்தில் 'பேஸ்புக்' வலைதளத்தில் தன் நண்பரின் பதிவு ஒன்றுக்கு பதில் அளித்திருந்தார்.அதில் சேகர் 'தமிழ் என்ற காட்டுமிராண்டி மொழில ஒருத்தன் 5௦௦௦ ரூபாய் கொடுக்கச் சொன்னான். வந்தா அதை காணோம். அதை கேளுங்கடா என்றால் பதில் ஏதும் இல்லை. மாறாக வேறு பதில் அளிக்கின்றனர்' என பதிவு செய்திருந்தார்.

தமிழக காவல் துறைக்கும் காவலர்களுக்கும் நன்மை செய்து வரும் அரசு குறித்து காவலர் இப்படி பதிவு செய்வது நியாயமா என ஒருவர் 'பேஸ்புக்'கில் கேள்வி எழுப்பி இருந்தார்.இப்படி அடுத்தடுத்து கேள்வி பரிமாற்றம் நடந்துள்ளது. இதையறிந்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதில் உதவி ஆய்வாளர் சேகர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டிருந்தது உறுதியானது. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

தலைப்புச்செய்திகள்