Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: நான்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் அதிமுகவிற்கு கோமக ஆதரவு தெரிவித்துள்ளது.
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 19.5.2019 நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் அதிமுகவிற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோகுல மக்கள் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
அதையடுத்து கோ.ம.க.வின் நிறுவனத்தலைவர் எம்.வி.சேகர் மற்றும் நிர்வாகிகள், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆதரவை தெரிவிப்பதற்கான கடிதத்தை அளித்தார்.