Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

ஜனவரி 26, 2022 10:59

புதுடெல்லி: டில்லியில் உள்ள தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் 73வது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்றி முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள போர் நினைவிடத்திற்கு வந்த பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். அங்குள்ள வருகை பதிவேட்டிலும் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.

தலைப்புச்செய்திகள்