Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் ஒரே நாளில் 2.86 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

ஜனவரி 27, 2022 12:29

புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 573 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் தொற்றில் இருந்து 3,06,357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,86,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 573 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் தொற்றில் இருந்து 3,06,357 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
 
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 22,02,472 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

நாடு முழுவதும் நேற்று வரை 1,63,84,39,207 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்