Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஷ்மீரில் மோதல்: 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜனவரி 30, 2022 10:35

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2 இடங்களில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் கமாண்டர், பாக்., தீவிரவாதிகள் உட்பட 5 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

புல்வாமா மாவட்டம் நயிரா பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 4 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். புத்கம் மாவட்டத்தின் சரார் ஐ ஷரீப் பகுதியில் நடந்த மோதலில் தீவிரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான். இரண்டு இடங்களில் இருந்தும், துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையிர் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக காஷ்மீர் போலீஸ் ஐஜி விஜயகுமார் வெளியிட்ட அறிக்கையில், பாதுகாப்பு படையினருடன், கடந்த 12 மணி நேரமாக நடந்த மோதலில் 5 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அதில் ஒருவன் ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத அமைப்பில் கமாண்டராக செயல்பட்ட ஜாகித் வானி. மற்றொருவன் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி. மற்ற 3 பேரும், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள். இது, பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்