Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கணவரை கொல்ல 7 ஆண்டுகளாக உணவில் வி‌ஷம் கலந்து கொடுத்த மனைவி

பிப்ரவரி 05, 2022 10:30

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் சிறையின் கீழ் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஆஷா. கோட்டையம் பாலா பகுதியைச் சேர்ந்தவர். திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி இருவரும் பாலா பகுதியில் வசித்துவந்தனர்.

சுரேஷ் அந்தப் பகுதியில் உள்ள ஐஸ்கிரீம் பார்லர்களுக்கு ஐஸ்கிரீம் சப்ளை செய்துவந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு சுரேஷ் அந்தப் பகுதியில் சொந்தமாக வீடு கட்டினார். அதன் பிறகு சுரேசுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் தகராறில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சுரேஷுக்கு அடிக்கடி உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. இதற்காக அவர் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்ற பின்னரும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. சமீபத்தில் சுரேஷ் வேலை வி‌ஷயமாக ஒரு மாதம் வெளியூர் சென்றார். அங்கு தங்கியிருந்தபோது அவருக்கு உடல்நலக் கோளாறு எதுவும் ஏற்படவில்லை. அதன் பிறகு வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வந்த பின்பு மீண்டும் அவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவருக்கு மனைவி மீது சந்தேகம் கிளம்பியது.

எனவே அவர் ரகசியமாக மனைவியை கண்காணிக்க தொடங்கினார். இதில் அவரது மனைவி அடிக்கடி மருந்துக் கடையில் மாத்திரைகள் வாங்குவதை பார்த்தார். இதுபற்றி மனைவியின் தோழி மூலம் விசாரித்தார். இதில் அந்த மாத்திரைகள் மெல்லக் கொல்லும் வி‌ஷ தன்மை கொண்டது என தெரியவந்தது.

இந்த மாத்திரையை சுரேஷின் மனைவி ஆஷா சுரேஷுக்கு உணவில் கலந்து கொடுத்து வந்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 7 ஆண்டுகளாக இவ்வாறு செய்துள்ளார். இதன் மூலம் யாருக்கும் சந்தேகம் வராமல் கணவரை கொன்றுவிட அவர் திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி ஆஷாவை கைது செய்தனர்.
 

தலைப்புச்செய்திகள்