Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஷ்மீர் வாக்குசாவடியில் கையெறி குண்டு வீசி தாக்குதல்

மே 06, 2019 05:21

ஸ்ரீநகர்: மக்களவை தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. 7 மாநிலங்களில் உள்ள 51  தொகுதிகளில் இன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


இந்த நிலையில், ஜம்மூ காஷ்மீர் மாநிலங்களில் தேர்தல் நடக்கும் இடங்களுக்கு அருகில் வன்முறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஜம்மூ காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில்,  கையெறிக் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. எனினும் இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
 

தலைப்புச்செய்திகள்