Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாரக்போர் தொகுதியில் வன்முறை

மே 06, 2019 05:30

மே.வங்கம்: மக்களவை தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. 7 மாநிலங்களில் உள்ள 51  தொகுதிகளில் இன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மே.வங்கம் மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் பாரக்போர் தொகுதி பாஜக வேட்பாளர் அர்ஜூன் சிங், தன்னை திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.  வாக்காளர்களை வாக்களிக்க விடாமல், திரிணாமூல் காங்கிரஸ் குண்டர்கள் தடுப்பதாகவும், குற்றம் சாட்டினார். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

தலைப்புச்செய்திகள்