Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சாவூர் மாணவி தற்கொலை வழக்கு - எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தது சி.பி.ஐ

பிப்ரவரி 16, 2022 10:48

தஞ்சை: தஞ்சையை அடுத்த மைக்கேல்பட்டி தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.  

இதுதொடா்பான மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை  மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி கடந்த மாதம் (ஜனவரி) 31-ந்தேதி உத்தரவிட்டது. 

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணையை உச்சநீதிமன்றம் உறுதி படுத்தியுள்ளது.

இதையடுத்து விசாரணையை தொடங்கிய மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகள், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, விடுதி வார்டன் சகாய மேரி 
மீது பிரிவு 305 (தற்கொலைக்குத் தூண்டுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்