![](admin/uploads/.60a9e16d738692.90516575.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கவுன்சிலர்கள் அனைவரும் 28-ந்தேதி மதியம் சத்தியமூர்த்தி பவன் வந்து விடவேண்டும் என்று கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நாளை மறுநாள் நடைபெறுகிறது.
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 28-ந் தேதி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசுகிறார்.
இதற்காக ராகுல் காந்தி அன்று காலை சென்னை வருகிறார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கும் ராகுல் காந்தி புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிறகு மாலை 6 மணியளவில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைமையகமான சத்தியமுர்த்தி பவன் செல்கிறார். அங்கு அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் மூத்த நிர்வாகிகள் வரவேற்கின்றனர்.
சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள உள்ளாட்சி அமைப்பு கவுன்சிலர்களை ராகுல் காந்தி சந்தித்து பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கவுன்சிலர்கள் அனைவரும் 28-ந் தேதி மதியம் சத்திய மூர்த்தி பவன் வந்து விடவேண்டும் என்று கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
கவுன்சிலர்களை சந்திக்கும் ராகுல்காந்தி அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்களுடன், மாநில பொதுச்செயலாளர்கள், மாநில துணைத்தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.
நிகழ்ச்சி முடிவில் உள்ளாட்சி அமைப்பு கவுன்சிலர்களுடன் ராகுல் காந்தி குழு புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.
நிகழ்ச்சி முடிந்ததும் அன்று இரவே ராகுல் காந்தி டெல்லி புறப்பட்டுச்செல்கிறார். ராகுல்காந்தி சென்னை வருவதையொட்டி அவரது பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர்.