Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியர்களின் நம்பிக்கை பாலம் பிரதமர் மோடி: மத்திய அமைச்சர் புகழாரம்

மார்ச் 04, 2022 11:27

புதுடெல்லி : 'உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு பாலமாக திகழ்கிறார்' என புகழ்ந்துள்ள மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் 'கார்ட்டூன்' ஒன்றையும் இணைத்துள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா அங்கு கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ள இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் சிறப்பு விமானங்களில் தாய்நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்தியாவைப் போல மற்ற நாடுகள் உக்ரைனில் உள்ள தங்கள் குடிமக்கள் மீது ஆர்வம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இந்நிலையில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் 'பிரதமர் நரேந்திர மோடி இந்திய மக்களின் நம்பிக்கை பாலமாக திகழ்கிறார். போர்க்களமான உக்ரைனில் இருந்து நாட்டு மக்களை அழைத்து வர மோடியை போல வேறு எந்த நாட்டு தலைவரும் அக்கறை காட்டவில்லை' என கூறியுள்ளார்.

மேலும் அந்தப் பதிவில் உக்ரைனுக்கும் இந்தியாவுக்கும் இடையில் மோடி தன் இரு கைகளையும் நீட்டியவாறு ஒரு பாலமாக நிற்பது போன்ற 'கார்ட்டூன்' ஒன்றையும் இணைத்துள்ளார். அதில் சீனா பாக். உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தோர் உதவி கேட்டு கூக்குரலிடுவது போலவும் அதன் தலைவர்கள் அமைதியாக வேடிக்கை பார்ப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்