Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழக பா.ஜனதாவில் நெல்லை, நாகப்பட்டினம், சென்னை மேற்கு, வட சென்னை மேற்கு, கோவை நகர், புதுக்கோட்டை, ஈரோடு வடக்கு, திருவண்ணாமலை வடக்கு ஆகிய 8மாவட்ட தலைவர்கள் நீக்கப்பட்டு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில மாவட்ட தலைவர்கள் நீக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:- மாவட்ட தலைவர்களை மாற்றும் நடவடிக்கையை மாநில தலைவர் அண்ணாமலை உடனடியாக செய்து விடவில்லை. கடந்த 3 மாதங்களாக அனைத்து மாவட்ட தலைவர்களின் நடவடிக்கைகள், கட்சி செயல்பாடுகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தன.
கட்சியினரை அரவணைத்து செல்லாதது, குறிப்பிட்ட சிலரை மட்டுமே வைத்துக்கொண்டு கட்சியை விரிவுபடுத்தாமல் இருந்தது போன்ற பல்வேறு குறைபாடுகளை கண்டறிந்துள்ளனர். அவர்கெல்லாம் இன்னும் தீவிரமாக செயல்பட்டு இருந்தால் நடந்து முடிந்த தேர்தலிலும் மேல சில இடங்களை கைப்பற்றி இருக்கலாம்.
ஆனால் மாவட்ட தலைவர்கள் அனைவரும் கட்சி வளர்ப்பு பணியில் கூடுதல் ஈடுபாடு காட்டாததால் அவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். இந்த நீக்கத்தை பார்த்து மற்றவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மேலும் சிலரது வாய்ப்புகள் பறிக்கப்படலாம் என்று அவர்கள் தெரிவித்தனர். அண்ணாமலையின் இந்த அதிரடி நடவடிக்கைகள் கட்சியினரை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது.