Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவர்கள் மீட்பில் திமுக பொய் பிரசாரம் செய்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு

மார்ச் 07, 2022 12:12

திருப்பூர்: ''உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்கும் விஷயத்தில், தி.மு.க.,வின் பொய் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும்,'' என்று, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

திருப்பூரில் பா.ஜ., சார்பில், வாக்காளருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:அடுத்து நமது இலக்கு லோக்சபா, சட்டசபை தேர்தல் தான். தொடர்ச்சியாக பா.ஜ.,வினர், மக்கள் பணியாற்ற வேண்டும். அவர்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூற வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில், ஏராளமான திட்டங்களை மத்திய அரசு வழங்கி உள்ளது.

உக்ரைன், ரஷ்யா என, இரண்டு நாடுகளின் அதிபர்களிடம் பேசும் வல்லமையும், தகுதியும் பிரதமர் மோடிக்கு உள்ளது. 90 சதவீத மாணவர்களை மத்திய அரசு மீட்டு வந்துள்ளது.பொய்யை மட்டும் மூலதனமாக வைத்து தி.மு.க., அரசியல் செய்கிறது.

உக்ரைன் மாணவர்கள் மீட்கும் விவகாரத்தில் எவ்வித பாரபட்சமும் இன்றி, இந்திய மாணவர்களாக மீட்கப்படுகின்றனர். தி.மு.க., வின் பொய் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

தேசிய செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநில பொது செயலாளர் செல்வக்குமார், ஆர்.எஸ்.எஸ்., கோட்ட தலைவர் பழனிசாமி, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்