Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி காணாமல் போய் விடும்: அண்ணாமலை உறுதி

மார்ச் 20, 2022 10:51

கோவை : ''தமிழகத்தில், திராவிட மாடல் ஆட்சி காணாமல் போய் விடும். தேசிய உணர்வுள்ள மக்கள் வாழும் தமிழகத்தில், 2024ம் ஆண்டுக்கு பின் பா.ஜ., மாடல் ஆட்சி தான் நடக்கும்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

கோவையில் நடந்த நிகழ்ச்சியில் இவர் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற பின், பல மாநிலங்களுக்கு இடையே இருந்து வந்த பல பிரச்னைகளுக்கு சுமூகமாக தீர்வு கண்டுள்ளார். அந்த மாநில மக்களிடம் அமைதியை ஏற்படுத்தினார்.

அதன் விளைவாக, மக்கள், நான்கு மாநில வெற்றியை அளித்துள்ளனர். மற்ற தேர்தல் வெற்றியை விட, இந்த நான்கு மாநில வெற்றி மிக முக்கியமானதாகும்.இந்த எட்டு ஆண்டுகள் ஆட்சியில், பா.ஜ.,வுக்கு எதிரான சிந்தனை உள்ளவர்கள், ஆதரவு அளிக்கும் மனநிலை உள்ளவர்களாக மாறி உள்ளனர்.

2024ம் ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் பா.ஜ., மீண்டும் ஆட்சியமைக்க மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். தமிழகத்தில் 'திராவிட மாடல்' ஆட்சி எல்லாம் விரைவில் காணாமல் போய் விடும். தேசிய உணர்வு அதிகம் உள்ள மக்கள் வசிக்கும் தமிழகத்தில், 2024ம் ஆண்டுக்கு பின், பா.ஜ., மாடல் ஆட்சிதான் நடக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.

பா.ஜ., மாநில துணைத் தலைவர் கனகசபாபதி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், ஒருங்கிணைப்பாளர் ராமசந்திரபிரசாத், பா.ஜ. அறிவுசார் பிரிவு செயலாளர் ஜெகநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்