Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாலியல் தொந்தரவு: நித்தியானந்தா மீது வெளிநாட்டு பெண் புகார்

மார்ச் 24, 2022 10:58

பெங்களூரு : 'கைலாசா' என்ற அடையாளம் தெரியாத வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நிலையில், 'நித்தியானந்தா எனக்கு பாலியல் தொந்தரவு தருகிறார்' என வெளிநாட்டு சிஷ்யை ஒருவர் 'இ - மெயில்' வாயிலாக கர்நாடகாவின் பிடதி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

பெங்களூரு அருகே உள்ள பிடதியில் ஆசிரமம் அமைத்து இருந்த நித்தியானந்தா, பாலியல் புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜாமினில் வெளிவந்த அவர், தற்போது அடையாளம் தெரியாத, 'கைலாசா' என்ற, தானே பெயரிட்டுள்ள நாடு ஒன்றில் தலைமறைவாக இருந்தபடி, இணையதளங்களில் உலா வருகிறார்.

இந்நிலையில், சாரா லாண்டரி என்ற வெளிநாட்டு பெண், பெங்களூரில் உள்ள பிடதி போலீசாருக்கு, இ- - மெயிலில் புகார் அனுப்பியுள்ளார்.அதில், 'கைலாசா என்ற நாட்டில் நித்தியானந்தாவும், அவரது சீடர்களும் அங்குள்ள பெண்களை அடித்து துன்புறுத்தி பாலியல் தொந்தரவு அளிக்கின்றனர். எனக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தார்' என கூறி உள்ளார்.

அதை பார்த்த பிடதி போலீசார், 'இது போன்ற, இ - மெயில் புகார்களை ஏற்க முடியாது. அதனால் நீங்கள் எந்த பயமும் இல்லாமல் இந்தியாவின் ஏதாவது ஒரு போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளியுங்கள்' என பதில் அனுப்பி உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்