![](admin/uploads/.646ccf613525e6.80783651.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாடாளுமன்றத் தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. பீகார் மாநிலத்தில் 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 5 தொகுதிகளிலும் காலை முதலே மந்தமான நிலையிலே வாக்குப்பதிவு உள்ளது. மதியம் 3 மணி வரையில் 44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மாலை நேரத்தில் வெயில் குறைந்ததும் வாக்குப்பதிவு உயர வாய்ப்பு உள்ளது எனவும் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பீகாரில் தள்ளாத வயதிலும் தளராமல் வாக்களிக்க வந்த மூதாட்டி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார். வைசாலி மாவட்டம் ஹஜிபூரில் 90 வயதுடைய மூதாட்டி தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். பாதுகாப்பு படையினர் மற்றும் உறவினர்கள் அவரை வாக்குச்சாவடிக்கு கட்டிலில் தூக்கி வந்தனர். அங்கு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் மூதாட்டி வாக்களித்து சென்றார். எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மூதாட்டி வாக்கை பதிவு செய்து சென்றார்.