![](admin/uploads/.5d9abb91601a60.37504256.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: 'தமிழகத்தில் தாமரையின் மலர்ச்சி உறுதி செய்யப்பட்டு விட்டது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: கடந்த 2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று, மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது. நாட்டில் பா.ஜ., ஆட்சி நடக்கும், 19 மாநிலங்களில், 14ல் பா.ஜ.,வை சேர்ந்தவர்களே, முதல்வர்களாக உள்ளனர். மோடியின் நல்லாட்சிக்கு தந்த பரிசாக, தமிழகத்திலும் தற்போது பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தாமரையின் மலர்ச்சி உறுதி செய்யப்பட்டு விட்டது. இனி தாமரையின் வளர்ச்சி மற்றும் பிரதமரின் நல்லாட்சியை, தமிழகத்திலும் நடத்தி காட்ட வேண்டியது நம் கடமை. ஸ்தாபகர் தினமான இன்று, நாம் அதற்கான உறுதிமொழியை எடுத்து கொள்வோம். அடுத்து வரும், 15 நாட்கள், மத்திய தலைமை நமக்கு வகுத்து கொடுத்திருக்கும் திட்டங்களை ஆர்வத்துடனும், கவனத்துடனும் செய்து முடிப்போம்.
அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்கு, இந்த இரு வார நிகழ்ச்சிகள் இன்றியமையாதவை. ஒவ்வொரு மாவட்ட தலைவரும், மண்டல் தலைவர்களும் இந்த நிகழ்ச்சிகளை, தங்கள் பகுதிகளில் மிக தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.