![](admin/uploads/.5fa68111b770e3.64359868.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை : தமிழகத்தில் சீராக மின் வினியோக திட்ட பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு 7,504 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகம் உட்பட பல்வேறு மாநில மின் வாரியங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன. இதனால், மத்திய அரசு, மின் வினியோக சீர்திருத்த திட்டங்களுக்காக, தமிழகம், ஆந்திரா, உ.பி., உட்பட 10 மாநிலங்களுக்கு, 28 ஆயிரத்து 204 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. அதில், தமிழகத்திற்கு, 7,054 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட உள்ளது. அந்த நிதியில், சீராக மின் வினியோகம் செய்வது, மின் இழப்பை குறைப்பது உள்ளிட்ட திட்ட பணிகளை மேற்கொள்ள, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.