![](admin/uploads/.60c4ab63d51b04.52936351.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவியர் மது அருந்தியதாக எழுந்த புகாரை தொடர்ந்து, நான்கு மாணவியர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துாரில், கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இந்த கல்லுாரியில், பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவியர் சிலர், கடந்த மாதம், வகுப்பு அறையில் குளிர்பானத்தில் மது கலந்து குடித்துள்ளனர்.சக மாணவியர், இதை வீடியோவாக எடுத்து, நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவியதை அடுத்து, கல்லுாரி நிர்வாகம், மாணவியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் கூறியதாவது: சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவை பார்த்து, சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நான்கு மாணவியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.