Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எக்ஸ் இ வைரஸ் பரவல்: மஹாராஷ்ட்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை

ஏப்ரல் 09, 2022 11:06

புதுடெல்லி: கோவிட் பரவி வருவதால் 5 மாநிலங்களுக்கு சுகாதார துறை எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளது.

சீனா , மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் உருமாறிய புதிய கோவிட் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் எக்ஸ் இ வைரஸ் மகாராஷ்ட்டிரா, குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் நாள்தோறும் உருவாகும் தொற்று பாதிப்பு 1,500 ஐ தொட்டது.

கேரளா, மிசோரம், மஹாராஷ்ட்டிரா, புதுடில்லி, ஹரியானா மாநிலங்களில் புதிய கோவிட் வேகமெடுத்துள்ளது. இந்த 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதார துறை செயலர் ராஜேஷ் பூஷண் , கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்த கடிதத்தில் ; கோவிட் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்த வேண்டும். கோவிட் நோய் கண்டறிதல், சோதனை அதிகரித்தல், தடுப்பூசி முழுமைப்படுத்துதல், மேலும் போதிய மருத்துவ வசதிகள் தயார் படுத்துதல் என மாநில அரசு விரைந்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்