Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் ஐபோன் 13 உற்பத்தியை துவங்கிய ஆப்பிள் நிறுவனம்

ஏப்ரல் 12, 2022 11:00

புதுடெல்லி : 'ஆப்பிள்' நிறுவனம் இந்தியாவில், அதன் 'ஐபோன் 13' உற்பத்தியை துவங்கி உள்ளது. வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற ஐபோன் 13 ஸ்மார்ட்போனை, இந்தியாவில் தயாரிப்பதற்காக, சென்னைக்கு அருகில் உள்ள, 'பாக்ஸ்கான்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது ஆப்பிள்.

இது குறித்து, ஆப்பிள் அதன் அறிக்கையில் தெரிவித்துஉள்ளதாவது: அழகிய வடிவமைப்பு, பிரமிக்க வைக்கும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுப்பதற்காக மேம்படுத்தப்பட்ட கேமரா.அபார செயல்திறன் கொண்ட 'ஏ 15 பயோனிக் சிப்' ஆகியவற்றை கொண்ட ஐபோன் 13 ஸ்மார்ட்போனை, இந்திய வாடிக்கையாளர்களுக்காக, உள்ளூரில் தயாரிக்க துவங்கி உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாறு ஆப்பிள், அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்பில் உள்ள நிறுவனமாகும் ஆப்பிள். இந்நிறுவனம், கடந்த 2020ல், இந்தியாவில் ஆன்லைன் ஸ்டோரை துவங்கியது. விரைவில் ஆப்பிள் ஸ்டோர்களையும் ஏற்படுத்த இருக்கிறது.

தலைப்புச்செய்திகள்