Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவை அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து: பச்சிளம் குழந்தை, டிரைவர் பரிதாப பலி

ஏப்ரல் 13, 2022 10:57

கோவை : கோவை அருகே கட்டுப்பாட்டை இழந்து ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில், பச்சிளம் குழந்தை, டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக, பிறந்த குழந்தையுடன், ஏழு பேர் தனியார் ஆம்புலன்ஸ்சில் கோவை நோக்கி நேற்று வந்தனர். ஆம்புலன்ஸை ரவி, 32, ஓட்டி வந்தார். மலுமிச்சம்பட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ், சாலை மைய தடுப்பில் மோதி சாலையின் வலதுபுறத்தில் கவிழ்ந்தது.ஆம்புலன்சில் பயணம் செய்த பச்சிளம் குழந்தை, டிரைவர் ரவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றவர்கள் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். மதுக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

தலைப்புச்செய்திகள்