Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை:நீட் விலக்கு மசோதா தொடர்பாக தமிழக கவர்னர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார்.
கடிதத்தில், நீட் விலக்கு மசோதாவை விரைவாக மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். ஜனாதிபதி ஒப்புதல் பெறும் வகையில் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.
இரு முறை மசோதா நிறைவேற்றப்பட்டும் மத்திய அரசுக்கு அனுப்பாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. நான் நேரில் கவர்னரை சந்தித்து வலியுறுத்தியபோது கவர்னர் அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.