Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாஜகவில் இணைந்த ஆலை தொழிலாளர்கள்

ஏப்ரல் 15, 2022 11:40

புதுச்சேரி: ஆலை தொழிலாளர்கள் அசோக்பாபு எம்.எல்.ஏ. முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தனர்

புதுவை சுதேசி, பாரதி மில் தொழிலாளர்கள் கடலூர் சாலையில் உள்ள பாரதி மில் அருகில் ஒன்று கூடினர். அங்கிருந்து ஊர்வலமாக ஆலை ரோட்டில் உள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ. அசோக்பாபு அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அவரது முன்னிலையில் ரத்தினசபாபதி, புருஷோத்தமன், தெய்வநாயகம், கண்ணதாசன், பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்.

பின்னர் அவர்கள்,  தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து நிலுவை தொகைகளையும் பெற்றுத் தந்த அசோக்பாபு எம்.எல்.ஏ.வுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்