Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியில் சோகம்; நெரிசலில் சிக்கி 2 பேர் பலி

ஏப்ரல் 16, 2022 10:56

மதுரை: மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகினர்; 8 பேர் காயமுற்றனர். இந்த துயரச்சம்பவம் பக்தர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் யாருக்கும் உதவி தேவைப்பட்டால் 9498042434 என்ற அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரை திருவிழா மதுரையில் துவங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. மீனாட்சி கல்யாணம், தேரோட்டம் சிறப்பாக முடிந்த நிலையில், இன்று காலையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெற்றது.

கோவிட் பாதிப்பால் 2 ஆண்டுகளுக்கு பின் நடப்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. வீதியெங்கும் பக்தர்கள் அழகரை தரிசிக்க கூடியிருந்தனர். இன்று அழகர் ஆற்றில் இறங்கும் தல்லாகுளம் ஆழ்வார்புரம் பகுதி வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில் நெரிசல் ஏற்பட்டது.

இதில் 40 வயது மதிக்கத்தக்க ஆண், 60 வயது மதிக்கத்தக்க பெண் மூச்சு திணறி இறந்தனர்; 8 பேர் காயமுற்றனர். இறந்தவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.2 பேர் இறந்தததால் விழாவில் கூடுதல் பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்