Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2024 லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 25 எம்பி.,க்கள், 5 கேபினட் அமைச்சர்கள்; அண்ணாமலை நம்பிக்கை

ஏப்ரல் 16, 2022 11:03

மாமல்லபுரம்,-''வரும் 2024 லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் 25 எம்.பி.,க்கள் வென்று, ஐந்து கேபினட் அமைச்சர்களை பெறுவதே, தமிழக பா.ஜ.,வின் இலக்கு,'' என, மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

செங்கல்பட்டு மாவட்டம், கூவத்துாரில், செங்கல்பட்டு மாவட்ட பா.ஜ., சார்பில், தமிழ் புத்தாண்டு, பா.ஜ., குடும்ப திருவிழா, நேற்று முன்தினம் நடந்தது. விழாவில், பா.ஜ.,வினர் குடும்ப வாரிசுகளுக்கு, தீனதயாள் உபாத்யாய கல்வி உதவித்தொகை மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் வென்ற கட்சியினருக்கு, அண்ணாமலை விருது வழங்கினார்.

விழாவில் அவர் பேசியதாவது:வரும் 2024 லோக்சபா தேர்தலில், 25 எம்.பி.,க்கள்; மத்திய அமைச்சரவையில், ஐந்து கேபினட் அமைச்சர்கள் பெறுவதே, தமிழக பா.ஜ.,வின் இலக்கு. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் தொகுதி களிலும் வெற்றிபெற வேண்டும்.பா.ஜ., - எம்.பி.,க்களால், தமிழகத்திற்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய் நலதிட்டங்கள் கிடைக்கும். அமைச்சர்கள் பெறுவது எங்கள் பொறுப்பு.

இதற்காக, கட்சியினர் உழைக்க வேண்டும். வரும் 2024ம் ஆண்டு நம் கட்சிக்கு, சரித்திர ஆண்டாக அமையும்.இவ்வாறு அவர் பேசினார்.கட்சி மாநில செயலர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திரைப்பட இசையமைப்பாளர் தினா இசையில், பா.ஜ., பிரசார பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது.

தலைப்புச்செய்திகள்