![](admin/uploads/.5f8abd9fdb4cf1.64653985.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: டெல்லியில் நேற்று ஜஹாங்கிர்புரி பகுதியில் நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்றோர் மீது, மற்றொரு தரப்பினர் கல்வீச்சில் ஈடுபட்டதால் கலவரம் ஏற்பட்டது. இதில், போலீசார் உள்பட பலர் காயம் அடைந்தனர்.இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி முதல்வ்ர அரவிந்த கெஜ்ரிவால், துணை நிலை கவர்னர் அணில் பைலாலை சந்திக்கிறார்.
நேற்று நடந்த கலவரத்தின் போது அங்கு பாதுகாப்பிற்கு வந்த போலீசார் அவர்களை கட்டுப்படுத்தினர். இருப்பினும், கல்வீச்சில் போலீசார் உள்பட பலர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று முத்லவர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை நிலை கவர்னர் அணில் பைஜாலை சந்தித்து ஆலோசனை ந டத்த உள்ளதா தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலவரம்,சட்டம்,ஒழுங்கு குறித்து விவாதிக்கின்றனர்.
இதற்கிடையே, வன்முறை குறித்து அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டில்லியின் உயர் போலீஸ் அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொண்டார். வன்முறையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி, போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
முன்னதாக வன்முறை சம்பவம் தொடர்பாக 10 பேர் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.